செய்திகள்
தீ விபத்து

ஆரணி அருகே தீ விபத்தில் பெண் உயிரிழப்பு

Published On 2021-07-27 10:28 GMT   |   Update On 2021-07-27 10:28 GMT
குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.
ஆரணி:

ஆரணியை அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரின் மனைவி சரிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் சஞ்சய் என்ற மகனும், 3 வயதில் தாரணிகா என்ற மகளும் உள்ளனர். 21-ந்தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அப்போது குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.

அன்று மாலை சரிதா வீட்டுக்குள் நுழைந்ததும் டீ, போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். குபீரேன தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. சரிதா சேலையிலும் தீப்பிடித்து எரிந்தது, அவர் கூச்சலிட்டு அலறினார்.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News