ஆன்மிகம்
வருடாபிஷேக விழாவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

வருடாபிஷேக விழாவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2021-02-17 03:44 GMT   |   Update On 2021-02-17 03:44 GMT
கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 11-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 11-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகா சங்கர ஹோமம், காலை 8 மணிக்கு சங்கனூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடந்தது.

காலை 10 மணிக்கு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News