ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்த பெண் பக்தர்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கி விரதம் கடைபிடிக்கவும், காப்பு கட்டுதலுக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் கோவில் வாசல் முன்பு பக்தர்கள் சிலர் தாங்களாகவே காப்பு கட்டி கொண்டனர்.
மேலும் அவர்கள் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வந்தனர். இந்த நிலையில் விரதம் கடைபிடித்து வந்த பெண் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக நேற்று காலையில் கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மேலும் அவர்கள் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வந்தனர். இந்த நிலையில் விரதம் கடைபிடித்து வந்த பெண் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக நேற்று காலையில் கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.