செய்திகள்
கோப்புபடம்

உடுமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-10-11 09:43 GMT   |   Update On 2021-10-11 09:43 GMT
உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளானது, உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூர், சோமவாரபட்டி, ஆர்.பி.நகர், பெதப்பம்பட்டி, மாலகோவில், ஆலாமரத்தூர்,

மேலும் இலுப்பநகரம், மரிக்கந்தை, வல்லக்குண்டாபுரம், ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்-2, சிந்து நகர், ராம் நகர், ஜீவா நகர், ராமசாமி நகர், அரசு கலைக்கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி ஆகிய பகுதிகள் ஆகும்.
Tags:    

Similar News