செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி

Published On 2021-06-16 15:35 GMT   |   Update On 2021-06-16 15:35 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 246 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 246 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று வரை 46 ஆயிரத்து 753 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 44 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 127 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
Tags:    

Similar News