செய்திகள்
மேலூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
மேலூர் அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஏழை காத்தம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி.
இவரது மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனை பார்க்க ராசுவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி தப்பி ஓடி விட்டனர்.
குழந்தையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய ராசுவின் குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஏழை காத்தம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி.
இவரது மருமகள் லட்சுமிக்கு வெள்ளலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனை பார்க்க ராசுவின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 13 பவுன் நகைகளை திருடி தப்பி ஓடி விட்டனர்.
குழந்தையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய ராசுவின் குடும்பத்தினர் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.