செய்திகள்

ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி - கோவை வியாபாரி கைது

Published On 2019-05-20 11:58 GMT   |   Update On 2019-05-20 11:58 GMT
ஆன்லைனில் அரிசி வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்த கோவை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுமித் குப்தா. இவர் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வியாபாரி கோபி (வயது 38) என்பவர் பாஸ்மதி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார்.

உடனடியாக சுமித் குப்தா தனது நிறுவனத்தில் இருந்து ரூ. 50 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான பாஸ்மதி அரிசியை கோபிக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதற்கு அட்வான்சாக கோபி ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை சுமித் குப்தாகுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். மீதி கொடுக்க வேண்டிய ரூ.42 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சுமித்குப்தா தனது கோவை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் கிருஷ்ணகுமார் மேத்தா (49) என்பவரை கோபியை சந்தித்து மீதி பணத்தை வாங்கி வரும்படி கூறினார்.

இதனையடுத்து கிருஷ்ணகுமார் மேத்தா கோபியை பார்த்து பணத்தை கொடக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் இது குறித்து கிருஷ்ணகுமார் மேத்தா மாநகர குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கோபிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி தேவி, நிறுவன மேலாளர் சந்தோஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News