செய்திகள்
கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது

Published On 2020-09-14 11:40 GMT   |   Update On 2020-09-14 11:40 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 8-ந்தேதி காசாளர் பொன்ராஜ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது மர்மநபர்கள் திடீரென உள்ளே புகுந்து கத்தி முனையில் அலுவலகத்தில் இருந்த ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கல்குவாரி மேலாளர் விமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் (வயது 21), மகாராஜா (23), அப்துல் காதர் (22), ஆகாஷ் (21), வெங்கடேசன் (22), ஈஸ்வரன் (24), அருண்குமார் (22), சந்தோஷ் (24), ஜான் (21), சரத்கணேஷ் (22), ஜான் விக்டர் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.6½ லட்சத்தை கைப்பற்றினர்.
Tags:    

Similar News