செய்திகள்
காரைக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

காரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-12-10 18:07 GMT   |   Update On 2019-12-10 18:07 GMT
காரைக்குடி மற்றும் இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி:

காரைக்குடி என்.சி.சி. 9-வது பட்டாலியன் சார்பில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் கொடிநாள் விழா மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கர்னல் அஜய்ஜோசி தலைமை தாங்கினார். ஹவில்தார் சரவணன், சுபேதார் மேஜர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்த கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் கொடிநாள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் சுகாதார விழிப்புணர்வு குறித்த என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் முகம்மதுஇல்யாஸ் தலைமை தாங்கி மாணவர்கள் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்து பேசினார். முன்னதாக பள்ளியின் என்.சி.சி. அலுவலர் சிக்கந்தர்சுலைமான் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் பார்த்திபன், அப்துல் அஜீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். ஊர்வலம் இளையான்குடி கீழாயூர் காலனியில் இருந்து தொடங்கி இளையான்குடி நகரில் முக்கியமான வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News