செய்திகள்
கைது

திருச்சி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-29 12:02 GMT   |   Update On 2020-12-29 12:02 GMT
திருச்சி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:

திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் திருச்சி இ.பிரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் தெரு நுழைவுவாயில் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் பொட்டலத்தில் கஞ்சா விற்பனை செய்ததும், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 20), கோபிகிருஷ்ணன் (21) என்பதும் தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News