வழிபாடு
மாரியம்மன்

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜலசந்தி மாரியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2022-01-08 07:34 GMT   |   Update On 2022-01-08 07:34 GMT
கும்பகோணம் ஜலசந்தி மாரியம்மன் கோவிலில் வருகிற 20-ந்தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதி பகுதியில் விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் ஜலசந்தி மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News