செய்திகள்
ராகுல் காந்தி

தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது- தூத்துக்குடியில் ராகுல் பிரசாரம்

Published On 2021-02-27 10:23 GMT   |   Update On 2021-02-27 10:23 GMT
தூத்துக்குடியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, தமிழக மக்களையும் தமிழகத்தையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என பாஜகவை சாடினார்.
தூத்துக்குடி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, தமிழகத்தில் இன்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்கினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசை கட்டுப்படுத்துவதுபோல் தமிழக மக்களையும் தமிழகத்தையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நல்ல அரசையும் மக்களுக்கு நல்லது செய்யும் அரசையும் கொண்டு வர நாம் நினைக்கிறோம். ஒரு கருத்துதான் இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்த கருத்தே நமக்கு தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

உப்பள தொழிலாளர்கள் மத்தியில் ராகுல் பேசியபோது, ‘பாஜக ஆட்சியின் கீழ் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிசெய்ய, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நியாய் திட்டத்தை கொண்டு வருவோம். ஏழைகள் வறுமையிலிருந்து வெளியேறும் வரை அது தொடரும்’ என்றார்.
Tags:    

Similar News