செய்திகள்

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ கட்டத்தில் கைது

Published On 2019-04-15 13:35 GMT   |   Update On 2019-04-15 13:35 GMT
மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ கட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த கும்மனூர் கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முத்துராஜ் (21).

இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த மாதம் கடத்தி சென்று விட்டதாக பெண்ணின் பெற்றோர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகருக்கு கடத்தப்பட்ட பெண்ணுடன் வந்த முத்துராஜை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
Tags:    

Similar News