செய்திகள்
சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா

ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னாவுக்கு தனித்தன்மை வாய்ந்த இன்றைய ஆட்டம்

Published On 2021-05-01 14:26 GMT   |   Update On 2021-05-01 14:26 GMT
ரோகித் சர்மா 350-வது டி20 போட்டியிலும், சுரேஷ் ரெய்னா 200-வது ஐபிஎல் போட்டியிலும் விளையாடுகிறார்கள்.
ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் களம் இறங்கியுள்ளார். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 350-வது டி20 போட்டியாகும். இதன் மூலம் 350 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு 200-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியாகும். மேலும், எம்எஸ் டோனி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்குப் பிறகு 200-வது போட்டியில் விளையாடும் 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Tags:    

Similar News