செய்திகள்
ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு மனு
ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இதை எதிர்த்து தமிழக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் முறையீடு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதாக உள்ளது என அதில் தெரிவித்துள்ளது.