ஆன்மிகம்
தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.

கும்பகோணத்தில் 5 கோவில்களின் தேரோட்டம்

Published On 2021-02-26 04:40 GMT   |   Update On 2021-02-26 04:40 GMT
கும்பகோணத்தி்ல் 5 கோவில்களின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் மகாமககுளத்தில் ஆண்டு தோறும் மாசிமகவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகாமகமும் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கும்பகோணம் பகுதியில் உள்ள 6 சிவன் கோவில்களில் கடந்த 17-ந்தேதியும், வைணவ கோவில்களில் 18-ந்தேதியும் கொடியேற்றத்துடன் மாசிமக விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஓலை சப்பரமும், திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

இந்தநிலையில் நேற்று மகாமக குளத்தை சுற்றியுள்ள கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களின் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளும் ஒரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த கோவில்களின் தேரோட்டம் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் நடந்தது. இதேபோல் ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய கோவில்களின் தேரோட்டம் அந்தந்த கோவில்களின் வீதிகளில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Tags:    

Similar News