செய்திகள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்திக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமீபத்தில் ராகுல் காந்தி மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.