லைஃப்ஸ்டைல்
அச்சுறுத்தும் மாரடைப்பு

அச்சுறுத்தும் மாரடைப்பு

Published On 2019-07-21 04:30 GMT   |   Update On 2019-07-21 04:30 GMT
இன்றைய நவீன உலகில் மாரடைப்பு என்பது மிகச் சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் போல் உள்ளது. இருதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

இன்றைய நவீன உலகில் மாரடைப்பு என்பது மிகச் சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் போல் உள்ளது. இருதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 80% உயிரிழப்புகள் இதய நோயினால் ஏற்படுகிறது. இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேரில் 272 என்ற விகிதத்தில் உள்ளது. முக்கியமாக இந்தியாவில் இதய நோய் இறப்பு விகிதம் அதிகம் இருப்பது தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 23.2 மில்லியன் (1990களில்) இருந்த இறப்பு விகிதம், 37 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

மாரடைப்பு

பெரும்பாலும் மாரடைப்பு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அதிகமாவதால், அது ரத்த குழாய்களில் சென்று சிறிது சிறிதாக படியத் தொடங்குகிறது, அதிக உடல் எடையினால், இதயநோய் குடும்ப பிண்ணணி இருந்தால் இதய நோய்களும், மாரடைப்பும் வரும். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு, அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகளை சிறு வயது முதல் உட்கொண்டுவருதல், புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு, காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கும், இதய பிரச்சனைகள் வரும். இதய செயல்பாடுகளின் குறைபாட்டினால், மற்றும் ரத்த அழுத்ததினாலும் தமனிக்களின் நோய்களாலும், இருதய செயலிழப்பினாலும் பெரும்பாலும் இறக்கிறார்கள். பிறப்பிலிருந்தே சிலருக்கு இருதய கோளாறுகள் இருக்கும்.

இதயம்

மனித இதயம் கருத்தரித்த 18-19 நாட்களில் உருவாகிறது, துடிக்க தொடங்குவது சரியாக 21 நாட்கள் அல்லது இறுதி மாதவிடாய் நாள் இருந்து சரியாக 5 வாரங்களில் தான். நம் பிறப்பிலிருந்து நாம் இறக்கும் வரை இதயம் துடித்துக் கொண்டிருக்கும். நமது இதயமானது 3 மில்லியன் முறைகள் சுருங்கி விரிகிறது. ஓய்வு இல்லாமல் இயங்குகிறது.

இதற்கு நெஞ்சு, நெஞ்சாங்குலை, என்பது குருதிச் சுற்றோட்டத் தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் மூலம் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.

முதுகெலும்புகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 துடிப்புகள் ஆகும். 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250-350 கிராமும் 9-11 அவுன்சு. ஆண்களில் 300-350 கிராம் (11-12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.

நம்முடைய இதயம் கைமுட்டியளவு என்பது நாம் அறிந்ததே. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள், சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது.

இது இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்ததை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப்படை (இதய வெளியுறையின் ஒரு பகுதி) இதயத்தசைப்படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின் கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.
இதயத்தின் அமைவிடம் மற்றும் வடிவம்

முதுகெலும்புகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத் தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும்

இதயச் சுவர்கள்

வெளியில் இதயவுறைப் படை, நடுவில் - இதயத்தசைப்படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய 3 படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது.

இதயம் கூம்பு வடிவானது இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது. இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலதுபுறம் அமைந்திருக்கும்) நுரையீரல் தவிர்த்து உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது. இதயம் இடது வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது. இதயமானது இதயத்தசை என்னும் தன் விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது.

இதயவறை

இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக் கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளது. இடதுபுறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் எனும் வெட்டாகத் தென்படுகிறது. இடது மற்றும் வலது இதய மேலறையில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும். இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோனை எனப்படும்.

இடது மேல் மற்றும் கீழ் இதய வறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது.

இதய அடைப்பிதழ்

மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கபட்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன.

இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை.

முடியுருக் குருதிச்சுற்றோட்டம்

தசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக் கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும்.

இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது. இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது.

நரம்பு விநியோகம்:

துணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பிரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக் கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமை விழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற் பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்க வைக்கின்றது.

இதற்கு மாறாக துணைப்பிரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத்துடிப்பு குறைக்கின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது. இது இதய நரம்புப்பின்னல் எனப்படும். துணைப்பிரிவு நரம்பியக்கம் இதயத்தின்; செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

குருதி ஓட்டம்

குருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயல்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரல் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது. இடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைக்கின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது. இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது.

ஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அப்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும். இதில் இதயம் சுருங்கும் அவற்றை இதயச் சுருக்கம் எனவும் இதயம் விரியும் அவற்றை இதய விரிவு  எனவும் அழைக்கப்படுகிறது.

இதய வெளியேற்றக் கொள்ளளவு

நிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்ற நிமிடத்திற்கு ஐந்து லிட்டராகக் கருதப்படுகறிது. துடிப்புக் கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும்போது இடது கீழ் இதயவறையால் வெளியேற்றப்படும். குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலிட்டர் ஆகும்.

இதய வெளியேற்றக் கொள்ளளவு = துடிப்புக் கொள்ளளவு ஜ் இதயத்துடிப்பு வீதம் (எ.காட்டு)
இதய வெளியேற்றக் கொள்ளளவு= 70 மில்லிலிட்டர் ஜ் 72 = 5040 மில்லிலிட்டர்.

மின் கடத்துகை

சிரைப்பைச் சீரத்துடிப்பு (ளுவீரௌ சாலவாஅ) என்பது இதயத்தின் துடிப்புச் சீராக்கியாகிய சிரைப்பைச் சோணைக் கனுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது, சிரைப்பைச் சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச் சோணைக் கணு, அமைந்துள்ளது.

இதய ஒலி

பொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக “லப்-டப்” என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (ஷி1) இரண்டாம் (ஷி2) இதய ஒலிப்புகள் என அழைக்கப்படுகின்றன. ‘லப்’ எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும்போது ஏற்படும் ஒலியாகும். ‘டப்’ என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது.

இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும் எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். இவை தவிர மூன்றாம் (ஷி3-லப்-டப்-டா) நான்காம் (ஷி4-ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாய்ச்சலோட்டம் என அழைக்கப்படுகின்றன.

குதிரை ஒன்று ஓடும்போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சில வேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் இதய ஒலிப்பாகும்.

குருதி ஊட்டக்குறை இதய நோய்

இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதயநோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுறு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் இரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்றவைகளால் இந்நோயின் இடற்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

மாரடைப்பு

இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத்தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெளளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகிறது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக் கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும்போது நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும்போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம்.

இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும்.

இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசை பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத்தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இது இதயத்தசை இறப்பு ஆகும்.

Tags:    

Similar News