ஆன்மிகம்
ஆரணி பொன்னெழில் நாதர் கோவிலில் சாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

ஆரணி பொன்னெழில் நாதர் கோவிலில் சாமி மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Published On 2021-02-08 05:11 GMT   |   Update On 2021-02-08 05:11 GMT
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவிலில் உள்ள சாமி சிலை மீது சூரியஒளி விழுந்தது. இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது.
ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் மதுரபூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதர் ஜினாலயம் கோவில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் 20-ந் தேதிக்கு பிறகு 3 நாட்கள் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கும்.

அதன்படி நேற்று சாமி சிலைமீது சூரியஒளி விழுந்தது. சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News