உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திருவட்டார் பிரபல ரவுடி கைது

Published On 2022-04-15 08:14 GMT   |   Update On 2022-04-15 08:14 GMT
திருவட்டார் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே வெட்டுகாட்டுவிளை, முளகு மூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ராஜ் வயது (வயது37).

இவர் நேற்று மாலை செட்டிச்சார்விளை பகுதி யில் இரவு நேரத்தில் அந்த பகுதியில் வந்த நபரை பணம் கேட்டு மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மெர்லின்ராஜை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர் அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் அவர் மீது திருவட்டார், தக்கலை, கொற்றியோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொலை மிரட்டல், திருட்டு என பல் வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியல் குற்ற பதிவேட்டிலும்  இவரது பெயர் உள்ளது. கைது செய்யப்பட்ட மெர்லின்ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில்  ஆஜர் படுத்தி நாகர் கோவில் மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News