தோஷ பரிகாரங்கள்
கடன் பரிகாரம்

கடன் வாங்கும் போதும்... கடனை அடைக்கும் போதும் மறக்கக்கூடாதவை...

Published On 2021-12-24 05:04 GMT   |   Update On 2021-12-24 07:52 GMT
கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். இல்லையென்றால் திரும்ப திரும்ப கடன் வாங்கி பெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும்.
கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கிபெரிய கடன்காரர் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்.

கடன் விரைவில் அடைபட செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30-க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். ஏன் என்றால் ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்ய வைப்பதே குளிகை நேரமாகும்.


Tags:    

Similar News