செய்திகள்
மரணம்

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி முதியவர் பலி

Published On 2019-11-13 09:37 GMT   |   Update On 2019-11-13 09:37 GMT
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி முதியவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள வெலிங்டன் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் சைமன்(வயது 87). இவர் இன்று காலை குன்னூரில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பிளாக் பிரிட்ஜ் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.

அப்போது வழியில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன.

இதை அவர் கவனிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கூட்டமாக நின்ற காட்டெருமைகளுள் ஒரு காட்டெருமை ஓடி வந்து சைமனை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு வயிறு, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வெலிங்டன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News