ஆன்மிகம்
காத்யாயனி தேவி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

நவராத்திரி விழா: காத்யாயனி தேவி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

Published On 2021-10-13 06:22 GMT   |   Update On 2021-10-13 06:22 GMT
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழாவின் 6-வது நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொம்மை கொலுவில் அம்மன் காத்யாயனி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஞான பிரசுனாம்பிகா தாயார் வியாக்ர சுயவதம் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால ஞானாம்பிகா சன்னதி வரை ஊர்வலமாக சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் வேதப்பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News