செய்திகள்
தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வைர வியாபாரி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-10-13 13:59 GMT   |   Update On 2021-10-13 13:59 GMT
திருச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வைரவியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

திருச்சி பெரிய கடைவீதி சம்ஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). வைர வியாபாரியான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சீனிவாசன், கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 9-ந்தேதி இரவு தனது வீட்டில் இருந்த மண்எண்ெணய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீனிவாசனின் மனைவி ஜோதி (58) கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News