உள்ளூர் செய்திகள்
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை கிளை நூலகம் எண் 2ல் போட்டி தேர்வுக்கான தமிழ் இலக்கணம் இலவச வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.நூலக வாசகர் வட்டம், முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கம் இணைந்து டி.என்.பி.எஸ்.சி., குரூப்1, 2 மற்றும் 4, போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்துகிறது.
தினமும் மாலை 6மணி முதல்7 மணி வரை நூலகத்தில் பயிற்சி வகுப்பு நடக்கும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.