செய்திகள்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம்
அவினாசி வட்டம் மடத்துப்பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் கலெக்டர் முன்னிலையில் இந்த ஏலம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 9, 3 சக்கர வாகனம் 1, 2 சக்கர வாகனங்கள் 82 என மொத்தம் 92 வாகனங்கள் நாளை 20-ந்தேதி(புதன்கிழமை) ஏலம் விடப்படுகிறது.
அவினாசி வட்டம் மடத்துப்பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் கலெக்டர் முன்னிலையில் இந்த ஏலம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.