செய்திகள்
6 மணிக்கு சீன ராணுவம் வெளியேற்றப்படும் தேதியை சொல்லுங்கள்: ராகுல் டுவீட்
சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘இன்று மாலை 6 மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிர உள்ளேன்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் ‘‘மதிப்பிற்குரிய பிரதமர், உங்களுடைய 6 மணி உரையாடலில், சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் தேதியை தயது செய்து தெரிவியுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.