செய்திகள்
செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளதா? -ஓ.பி.எஸ். பதில்

Published On 2019-10-24 06:11 GMT   |   Update On 2019-10-24 06:11 GMT
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
மதுரை:

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். 

இதற்கிடையே, தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்று அ.தி.மு.க. மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

அப்போது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார். 

ஆனால், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, அதிமுகவில் ஒருபோதும் சேர மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 
Tags:    

Similar News