செய்திகள்
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர்

குஜராத் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து- 9 பேர் பலி

Published On 2020-11-18 04:15 GMT   |   Update On 2020-11-18 04:15 GMT
குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த லாரி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் வகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், ஒரு லாரியின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. லாரியில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News