செய்திகள்
குன்னத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 75 பேர்கள் கலந்து கொண்டு சளி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் குன்னத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 75 பேர்கள் கலந்து கொண்டு சளி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ், ராசநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுபா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.