செய்திகள்
முக ஸ்டாலின்

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்- மு.க.ஸ்டாலின்

Published On 2020-09-09 09:53 GMT   |   Update On 2020-09-09 09:53 GMT
இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும்.

துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார்.  

9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர்.

மிசா காலத்தின்போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு

‘வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பட்டப் பெற்றவர் டி.ஆர்.பாலு. 3 முறை மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் டி.ஆர்.பாலு.

துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் மிசா காலத்தில் சிறைக்கு சென்றவர்கள்.

டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி., 3 முறை மத்திய அமைச்சராக இருந்தவர். கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு.

மறைந்த தலைவர் கருணாநிதி வகித்த பொறுப்பு டி.ஆர்.பாலுவின் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது.

அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.

துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்கு பயன்படட்டும்.

ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களானது மிகுந்த மகிழ்ச்சி.

ஆ.ராசா 5 முறை எம்.பி., பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ. என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆ.ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்கக்கூடியவர்கள்.

கட்சியின் வளர்ச்சிக்கு புதிய நிர்வாகிகள் தங்கள் மொத்த திறமையையும் பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News