உள்ளூர் செய்திகள்
உடுமலையில் பலத்த மழை-வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
காந்தி சதுக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
உடுமலை:
உடுமலை நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல்தண்ணீர் தேங்கியது.
காந்தி சதுக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
உடுமலை நகராட்சி யூனியன் அலுவலகம் அருகில் கோமதி நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.