செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2019-10-08 10:25 GMT   |   Update On 2019-10-08 10:25 GMT
வில்லியனூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தயில் கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உத்திரவாகினிபேட் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவி ஜான்சிராணியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

அதுபோல் நேற்றும் ராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், ஜான்சிராணி பணம் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் இனிமேல் வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு தருவேன் என்று கூறி திட்டினார். பின்னர் ஜான்சிராணி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.

மது குடிக்க பணம் கொடுக்காததாலும், வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததாலும் விரக்தி அடைந்த ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் வீட்டில் இருந்த இரும்பு பைப்பில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜான்சிராணி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News