செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா
பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதில் நேற்று 60 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதில் நேற்று 60 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.