செய்திகள்
கோப்புபடம்

கந்தம்பாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-11 08:41 GMT   |   Update On 2020-10-11 08:41 GMT
கந்தம்பாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் செங்கோடன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 23). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவரும், அதே தெருவை சேர்ந்த ஒரு விதவை பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மன வேதனை அடைந்த பிரபாகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அவரது தாயார் அருக்காணி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News