செய்திகள்
திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 22). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை அருகில் உள்ள சமுத்திரம் கூட்டுரோடு அருகில் சென்றார். அப்போது திருவண்ணாமலை ஜன்னத்நகரை சேர்ந்த காசிம் (24) என்பவர் திடீரென தமிழ்செல்வத்தை வழிமடக்கி அவரது சட்டை பையில் இருந்த ரூ.2,700-ஐ பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.
இதுகுறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிமை கைது செய்தனர்.