ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-19 04:46 GMT   |   Update On 2021-03-19 04:46 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் காலை 9.30 மணி அளவில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் 4-வது நாளான வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா செல்கின்றனர்.

பங்குனி உத்திர நாளான 27-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இரவு 7 மணிக்கு செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News