செய்திகள்
பெருந்துறை அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி
பெருந்துறை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் விருட்டம்பதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 60). நேற்று மாலை இவரும் இவரது உறவினர் மணிகண்டன் என்பவரும் ஸ்கூட்டரில் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 வாகனங்களும் மோதிக்கொண்டன.
இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த சாமியப்பன் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த உறவினர் மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் விருட்டம்பதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 60). நேற்று மாலை இவரும் இவரது உறவினர் மணிகண்டன் என்பவரும் ஸ்கூட்டரில் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 வாகனங்களும் மோதிக்கொண்டன.
இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த சாமியப்பன் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த உறவினர் மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.