செய்திகள்
தாக்குதல்

நிலக்கோட்டை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய கும்பல்

Published On 2019-09-18 11:32 GMT   |   Update On 2019-09-18 11:32 GMT
நிலக்கோட்டை அருகே முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது48). முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது. இதனால் பெண் வீட்டார் அழகர்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த கும்பல் அழசர்சாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தேன்மொழி அழகர்சாமியை தாக்கியதாக ராமசாமி, காமாட்சி, அழகம்மாள், ரோஜா ராஜி, அண்ணாமலை, பரமேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News