செய்திகள்
பிவி சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - 2வதுசுற்றுக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2020-01-15 13:09 GMT   |   Update On 2020-01-15 13:09 GMT
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
ஜெகார்த்தா:

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனையான பிவி சிந்து, தொடக்க சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார். ஆனாலும் சிறப்பாக ஆடிய பிவி சிந்து 2வது, 3வது சுற்றுக்களை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், பிவி சிந்து 14-21, 21-15, 21-11 என்ற கணக்கில் அயா ஒஹோரியை வெற்றி கொண்டார்.
Tags:    

Similar News