ஆன்மிகம்
திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்

Published On 2021-03-08 07:22 GMT   |   Update On 2021-03-08 07:22 GMT
கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் 125-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கஞ்சி வார்த்தல், சக்தி கரக வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து கோடை அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 10-ந் தேதி (புதன்கிழமை) வீரமாகாளியம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மந்திர பச்சை காளியம்மன் புறப்பட்டு தங்கை வீரமாகாளியம்மனை அழைக்கும் காட்சி நடக்கிறது.
Tags:    

Similar News