ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பணகுடி புனித அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பணகுடி புனித அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-12-01 04:04 GMT   |   Update On 2021-12-01 04:04 GMT
9-ம் திருவிழா அன்று மாலை பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது.
பணகுடி புனித அமல அன்னை ஆலய திருவிழா பங்கு குரு இருதயராஜ் அடிகள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் காலை ஜெபமாலை, திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

9-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது. அதன்பின் ஆடம்பரமாலை ஆராதனையும், 10-ம் திருவிழா (8-ந்தேதி) அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை அமல அன்னை ஆலய பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News