செய்திகள்
விபத்து

சிவகிரி அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-04-08 10:42 GMT   |   Update On 2021-04-08 10:42 GMT
சிவகிரி அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

சிவகிரி அருகே வாசு தேவநல்லூர் புதுக்காலனி தெருவைச் சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (வயது 62).

இவர் கடந்த 2-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலை வழியாக தென்காசி நோக்கி வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள ஆற்று பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெள்ளப்பாண்டி புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News