செய்திகள்
வல்லத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வல்லம்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தஞ்சை- கள்ளப்பெரம்பூர் சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.