உள்ளூர் செய்திகள்
காரிமங்கலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்திய சரக்கு வேன் திருட்டு
காரிமங்கலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்திய சரக்கு வேன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த வசந்த் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26). இவர் சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு வெளியே வேனை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் வந்து பார்த்த போது வேன் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து ராஜ்குமார் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.