செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 30 பேர் மீது வழக்கு

Published On 2021-06-06 10:53 GMT   |   Update On 2021-06-06 10:53 GMT
ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 30 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் உள்ளிட்ட போலீசார் 4 ரோடு, கடைவீதி, திருச்சி ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தி, ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் கடந்த 2 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 36-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாரிகள், இலகுரக வாகனங்களில் சமூக இடைவெளியின்றி ஆட்களை ஏற்றி வந்த டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News