ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-08-13 04:37 GMT   |   Update On 2021-08-13 04:37 GMT
பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருள, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், கடந்த 10-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருள, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News