ஆன்மிகம்
அனுமன்

வேலை கிடைக்க அற்புத பரிகாரங்கள்

Published On 2019-10-25 08:25 GMT   |   Update On 2019-10-25 08:25 GMT
அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க வேண்டுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
(1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு.

(2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.

(3) 14 முக ருத்திராட்சம் அணியலாம்.

(4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

(5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது,துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக விளைவிக்கும்.
Tags:    

Similar News