ஆன்மிகம்
மீனாட்சி அம்மனுடன் சுந்தரேசுவரர்

மதுரை ஆவணி மூலத்திருவிழா: கோவிலுக்குள் இன்று பிட்டுத்திருவிழா

Published On 2021-08-19 03:03 GMT   |   Update On 2021-08-19 03:03 GMT
இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) பிட்டுத்திருவிழா நடக்கிறது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். மீண்டும் சுவாமி கோவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும்.

தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பிட்டுத்திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற இருக்கிறது. ஆனாலும் பிட்டுத்திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பகலில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு சுந்தரேசுவரர்,, மீனாட்சி அம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணி மேல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

அது தவிர அரசின் உத்தரவின் படி வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News