கிறித்தவம்
இரவிபுத்தன் துறையில் புனித கேத்தரின் ஆலய தேர் பவனி

இரவிபுத்தன் துறையில் புனித கேத்தரின் ஆலய தேர் பவனி

Published On 2021-12-30 04:10 GMT   |   Update On 2021-12-30 04:10 GMT
இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது.
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழா கடந்த 23-ந்தேதி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது.

அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலய பங்குதந்தை ஜெரோம் அமிர்தைய்யன் தேரை அர்ச்சிப்பு செய்து பவனியை தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து தேர் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News